குட்டம், சிரங்கு, வாதம் போன்ற நோய்கள் கருங்கோழியின் இறைச்சியால் குணமாகும் என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது
முற்காலத்தில் கருங்கோழியுடன் பிற மூலிகைகளை சேர்த்து செய்யப்படும் மருந்து மூலம், வாயு போன்ற பல நோய்களை குணப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதன் முட்டையை சாப்பிட்டு வர உடல் வலிமை அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
கருங்கோழியின் மருத்துவ நன்மைகள் பற்றி எந்த ஒரு மருத்துவ துறையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இருப்பினும் ஸ்டெராய்டு ஊசி மூலம் வளர்க்கப்படும் பிரொய்லெரை ஒப்பிடும்போது இயற்கையான சூழலில் வளரும் நாட்டுக்கோழி, கருங்கோழியை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது.