Tuesday, March 28, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்வரணும்.. பழைய தோனியா திரும்ப வரணும்.. முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து

வரணும்.. பழைய தோனியா திரும்ப வரணும்.. முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மீண்டும் பழைய தோனி போன்று அதிரடியாக விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

சிஎஸ்கே இந்த ஐபிஎல் சீசனில் மிக மோசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. பலரும் ஒட்டுமொத்த அணியின் ஆட்டம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். தோனியின் தலைமை குறித்தும் அவருடைய தனிப்பட்ட ஆட்டம் குறித்தும் தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சீசன் முழுவதுமே தோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை, தொடக்கத்தில் நிதானமாக ஆடியதாக புகார் எழுந்த நிலையில் அதன் பின்னர் அதிரடியாக விளையாட முயற்சி செய்து உடனே விக்கெட்டுகளை பறிகொடுக்கிறார். குறிப்பாக ஸ்பின் பவுலிங்கில் தோனி அதிகம் தடுமாறுகிறார். இந்த சீசனில் தோனி வெறும் 180 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் தோனி மீண்டும் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளில் உலகின் மிகசிறந்த ஃபினிஷராக கருதப்படும் தோனி இந்த சீசனில் அவர் மீது இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.பல சிறந்த பேட்ஸ்மேன்கள் மோசமான கட்டத்திற்குள் சென்றுள்ளதை நான் பார்த்திருக்கிறேன். தோனி மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும் என்றால் முரட்டுத்தனமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். தோனி பழைய தோனியாக மீண்டும் மாற வேண்டும், அந்த கால கட்டங்களில் எல்லாம் தோனியிடம் அச்சமின்றி அதிரணிகள் மீது தாக்குதலை நிகழ்த்த கூடியவராக இருந்தார் என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

csk skipper dhoni should play like his old version

கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியுடன் வெளியேறிய பிறகு தோனி எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய திறமையை நிரூபித்து டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதற்கிடையே தான் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போக, தோனியும் தன்னுடைய ஒய்வு முடிவை அறிவித்தார். இதனால் இனி தோனியின் அதிரடி ஆட்டங்களை ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே கண்டுகளிக்க முடியும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டியிலும் தோனியின் பேட்டிங் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்கவில்லை.

இதற்கிடையே தான் இந்த தொடரில் சிஎஸ்கேவின் மோசமான தோல்வி, அணியில் இளம் வீரர்களை எடுக்காதது, தோனியின் மோசமான பார்ம் காரணமாக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.