Tuesday, March 28, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்டெல்லியால் தப்பித்தது.. வெற்றிகரமான தோல்வியுடன் ப்ளே ஆஃப் சென்ற பெங்களூரு

டெல்லியால் தப்பித்தது.. வெற்றிகரமான தோல்வியுடன் ப்ளே ஆஃப் சென்ற பெங்களூரு

அபுதாபி : முக்கியமான வாழ்வா சாவா போட்டியில் டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி ஒரு ஓவர் தாமதமாக தோற்றதால் கடைசி நேரத்தில் வெற்றிகரமான தோல்வியுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

2020 ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள மூன்று இடங்களில் 2 இரண்டு இடங்களை உறுதி செய்வதற்கான முக்கியமான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. 55 வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. இந்த போட்டியில் பெங்களூர் வென்று அதிக அளவிலான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் டெல்லிக்கு சிக்கல். அதேநேரம் டெல்லி அணி வெற்றி பெற்றால் 18 ஓவர்களுக்குள் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் பெங்களூர் அணிக்கு சிக்கல். இப்படியான நிலையில் தான் பெங்களூர் அணி பேட்டிங்கை தொடங்கியது.

அந்த அணியில் ஓப்பனிங் வீரராக களமிறங்கிய படிக்கல் மட்டுமே 50 ரன்கள் எடுத்தார். அவர் தவிர கோலி 29 ரன்களும், ஏபி டி வில்லியர்ஸ் 35 ரன்களும் எடுத்தனர். வேறு யாரும் பெங்களூர் அணிக்கு பேட்டிங்கில் கை கொடுக்கவில்லை. இந்த 3 வீரர்களை நம்பியே அந்த அணி இந்த தொடர் முழுவதும் விளையாடியுள்ளது. கிட்டத்தட்ட சென்னை போன்றே நிலையான பேட்டிங் ஆர்டர் இல்லாமல் பெங்களூர் அணியும் தடுமாறி வருகிறது. இறுதியாக 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. 153 என்கிற எளிதான இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

இந்த முறையும் ப்ரித்வி ஷா 10 ரன்கள் கூட எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் ஷிகர் தவான் மற்றும் ரஹானே கூட்டணி பெங்களூர் பந்துவீச்சுக்கு சவால் கொடுத்தது. இதற்கிடையே பெங்களூரு அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் க்றிஸ் மோரிஸ்க்கு காயம் ஏற்பட அவர் போட்டியின் பாதியிலேயே வெளியேறினார்.இதனால் 18 ஓவர்கள் வரை போட்டியை கொண்டுசெல்வது பெங்களூரு அணிக்கு சவாலானதாக மாறியது. ஒருவழியாக 18 ஓவர்களை கடந்துவிட்ட பிறகு க்றிஸ் மோரிஸ் இல்லாத காரணத்தினால் டெத் ஓவர் வீச 19 ஓவருக்கு சிராஜ் வந்தார். இதை பயன்படுத்திக்கொண்ட டெல்லி அணி 19 வது ஓவரிலேயே போட்டியை முடித்து வைத்தது. நல்ல வேலை சிராஜுக்கு முன்கூட்டியே வாய்ப்பு வழங்காவில்லை பின்னர் முன்பே போட்டியை முடித்து கொல்கத்தாவுக்கு கீழே நம் நிலைமையை கொண்டு சென்று ப்ளே ஆஃப் கனவை இந்த முறையும் வாய்ப்பில்லாமல் ஆக்கியிருப்பர் எனும் எண்ணத்தோடு பெங்களூரு அணியினர் இருந்தனர்.

இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் மூன்றாவது இடத்தை தக்கவைத்து கொண்டதால் பெங்களூரு அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இன்று நடைபெற உள்ள ஹைதராபாத் மும்பை இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றாலே போதுமானது ஏற்கனவே இருக்கும் அதிகப்படியான ரன்ரேட் வித்தியாசத்தில் ஹைதராபாத் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். இல்லையேல் கொல்கத்தா தகுதிபெறும்.