அனைத்திற்கும் ஆதியான சிவபெருமானுக்கு உகந்த நாளில் முக்கியமானது பிரதோஷம் ஆகும். அந்த பிரதோஷ நாளில் சிவபெருமானை வணங்கினால் கோடி புண்ணியம் என்பதால் சிவாலயங்களுக்கு சிவ பக்தர்கள் குவிவது வழக்கம்.
அந்த பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு இருக்கும் விரதம் பிரதோஷ விரதம் என்றும், சிவபெருமானுக்கு செய்யும் பூஜை பிரதோஷ பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. பிரதோஷ விரதமும், பிரதோஷ வழிபாடும் எப்படி செய்வது என்பதை கீழே காணலாம்.
- பிரதோஷ தினத்தில் அதிகாலையில் குளித்துவிட்டு திருநீறு பூசி சிவ நாமத்தை ஓதி உபவாசம் இருக்க வேண்டும்.
- காலை முதல் மாலை பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்துவிட்டு தரிசனம் முடிந்த பின்பு பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். இரவு உணவு சாப்பிடலாம்
- இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருள் கிடைக்கும்.
- தினந்தோறும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை நேரத்தில் சிவனை தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.
- சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.
தோஷங்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்?
- பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
- வறுமை நீங்கி செல்வம் பெருகும். தொழிலில் மேன்மை அடையலாம்.
- கடன் பிரச்சனைகள் தீரும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.
- பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும்.
- எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
- காராம்பசுவின் பாலால் அபிஷேகம் செய்து நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.
பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். ஆலயத்திற்கு நேரில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலே இருந்து சிவபெருமானை மனதார வேண்டி வணங்குங்கள்.
ALSO READ | மாசிமக நாளில் குலதெய்வத்தை வழிபடுவதால் இவ்வளவு நன்மைகளா..?