12 மாதங்களிலே அதிக சிறப்புகளும் விழாக்களும் கொண்ட மாதம் பங்குனி மாதம் ஆகும். இதன் காரணமாக, கிராமங்களில் பங்குனி திருவிழாக்களை நாம் பார்க்க முடிகிறது. பங்குனி மாதத்தில் வரும் தினங்கள், திதிகள் அனைத்தும் சிறப்பானதாகும்.
பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பங்குனி மாத அமாவசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
என்ன செய்ய வேண்டும்?
- பங்குனி மாத அமாவசை காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.
- சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதியில், தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்க வேண்டும்.
- பங்குனி அமாவசையில் அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட அந்த அம்மனின் அனுக்கிரகத்தால் நிச்சயம் குழந்தை பேறு இல்லாதவர்கள் புத்திர பாக்கியம் உண்டாகும்.
- பங்குனி அமாவாசை தினத்தில் தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் திருஷ்டி பூசணிக்காய் வாங்கி திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும்.
- பங்குனி அமாவாசை வழிபாடானது, இந்த ஆண்டு ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, அடுத்து பிறக்கும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வளமையை பொங்க செய்யும்.
- பித்ரு சாபம் மற்றும் குலதெய்வ சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் இன்பம் பெருகும்.
- திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும். இதனால், இல்லத்தில் சுபகாரியம் நடக்கும்
- உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். செல்வ நிலை உயரும்.
பங்குனி மாத அமாவாசை தினத்தில் ஆலயத்திற்கு சென்று இறைவனை மனதார உருகி வழிபட்டால், அனைத்து பயன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.
ALSO READ | பிரதோஷ வழிபாடு செய்வது எப்படி? பிரதோஷ விரதம் இருப்பதால் என்னென்ன பலன்கள்?