Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ்.. அலறும் உலக நாடுகள்.. முழு தகவல்!

வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ்.. அலறும் உலக நாடுகள்.. முழு தகவல்!

லண்டன்: மியூட்டேட் அடைந்திருக்கும் புதிய கொரோனா வைரஸ் வகை ஒட்டுமொத்த உலகையும் மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் தான் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இத்தாலியிலும் இந்த வகை வைரஸ் பாதிப்பால் இதுவரை 5 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சவுதி அரேபியா மீண்டும் அணைத்து வகையான சர்வதேச விமானங்களையும் ஒரு வாரத்திற்கு தடை செய்துள்ளது. லண்டன் முழுவதும் மீண்டும் கடுமையான ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க இந்தியாவில் இன்று அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்படி உலகம் முழுவதிலும் மீண்டும் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

மியூட்டேட் அடையும் வைரஸ்:

பொதுவாக வைரஸ்கள் இரண்டு வகைப்படும் ஒன்று டி.என்.ஏ வைரஸ் மற்றொன்று ஆர்.என்.ஏ வைரஸ். இதில் ஆர்.என்.ஏ வகை வைரஸ்கள் சூழலுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை படைத்தவை. இப்போது உலகம் முழுவதிலும் ருத்ரதாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் ஆ.என்.ஏ வகையை சேர்ந்தது. ஆரம்பத்தில் இருந்தே உலகம் முழுவதிலும் பலவகை கொரோனா வைரஸ் வகை பரவி வந்தது. இத்தாலியில் ஒரு வகை ஸ்ட்ரைன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு வகையும், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளிலும் ஒரு வகையும் பரவி வந்தது. ஆனால் இவை அனைத்திலும் பெரிய அளவில் வேறுபாடு கிடையாது. மரபணுக்களில் சிறு சிறு மாற்றங்கள் இருந்ததே தவிர பெரிய மாற்றங்கள் இல்லை. இங்கு தான் தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை வைரஸ் வேறுபடுகிறது. தெற்கு இங்கிலாந்தில் பரவி வரும் இந்த வகை கொரோனா வைரஸில் நிறைய மரபணு மாற்றங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த புதுவகை ஸ்ட்ரைன் B.1.1.7 என அழைக்கப்படுகிறது. வுஹானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசை விட பல மாற்றங்களை கொண்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸில் இருக்கும் கூம்பு போன்ற ஸ்பைக்கில் இருக்கும் புரதத்தில் பெருமளவு மாறுபாடு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கூம்பின் புரோட்டின் செல்கள் தான் அந்த வைரஸின் வலிமைக்கு மிக முக்கிய காரணம். மனித உடலுக்குள் வந்ததும், கொரோனா வைரஸில் இருக்கும் இந்த கூம்புகள்தான் உடலில் உள்ளே இருக்கும் செல்களை துளைத்துக் கொண்டு செல்கிறது. அதாவது இவை தான் மனித உயிரணுடன் தொடர்புகொள்ள முக்கிய காரணி. இதில் இருக்கும் புரோட்டின் செல்களில் தான் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ வைராலஜிஸ்ட் டாக்டர் ஜூலியன் டாங், “இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ்களுக்கு இது மிகவும் இயல்பானது என்றார். இது ஒரு கலப்பின வைரஸ் உருவாக வழிவகுக்கிறது. இது இயற்கையாக வைரஸ் மாறுபாடு அடையும் வழிகளில் ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

World has preparing for new mutated coronavirus. all you need to know

பரிசோதனையில் பாதிப்பை ஏற்படுத்துமா ?

இந்த புதிய வகை வைரஸில் இருக்கும் மாற்றங்களில் ஒன்று, வைரஸின் கூம்பில் இருக்கும் புரதங்கள் உருவாக்கும் அமினோ அமிலங்கள் வைரஸின் மரபணுவில் 6 முக்கிய தளங்களை நீக்குகிறது. உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள பொதுவான கொரோனா வைரஸ் பரிசோதனை முறையான PCR சோதனையின் போது பயன்படுத்தும் மூன்று மரபணு இலக்குகளில் இதுவும் ஒன்றாகும். இதனால் சில நேரங்களில் சோதனைகளின் போது நெகட்டிவ் என்று கூட முடிவுகள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற இரண்டு இலக்குகளை பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்டால் பாதிப்பு ஏற்படாது என்று இங்கிலாந்தின் வெல்கம் சாங்கர் நிறுவனத்தின் SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் முன்முயற்சியின் இயக்குனர் டாக்டர் ஜெஃப்ரி பாரெட் கூறியுள்ளார்.

மருத்துவ உயிர் வேதியியல் மற்றும் ஆய்வக மருத்துவத்திற்கான சங்கத்தின் நுண்ணுயிரியல் நிபுணத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் ராபர்ட் ஷார்டென் கூறுகையில், ஆய்வகங்கள் எந்த மரபணுவை இலக்காக கொண்டுள்ளன என்பதையும், சோதனை செயல்திறனைச் சோதிப்பதில் விழிப்புடன் இருப்பதையும் அறிந்திருக்கின்றன. பொதுவாக PCR சோதனைகளின் போது ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்களை இலக்காக கொண்டு எடுக்கப்படுவதால் இந்த புதிய மியூட்டேட் அடைந்த வைரஸ்களினால் பரிசோதனை முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றார்.

மிகவும் ஆபத்தானதா ?

இந்த புதிய வைரஸ் முந்தைய வகையை விட மிக வேகமாக பரவி வருவதாக பிரிட்டன் அரசாங்கம் சந்தேகிக்கிறது. ஆனால் விஞ்ஞானிகள் இதுகுறித்து முழுமையாக அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். ஒரு சிலர் பிரிட்டன் அரசாங்கத்துடன் உடன்படுகின்றனர். இருப்பினும் இந்த புதிய வகை வைரஸ் முன்பு பரவியதை விட எந்த ஒரு புதிய நோயையும் உருவாக்குகிறது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. வார்விக் மருத்துவ பள்ளியின் கவுரவ விரிவுரையாளர் டாக்டர் ஜேம்ஸ் கில் கூறுகையில், இதுபற்றி அறிய நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம். இது மேலும் பெரிய தொற்றுநோயாக தெரிகிறது. ஆனால் இது ஆபத்து அதிகமானதா அல்லது குறைவானதா என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை என்றார்.

தடுப்பூசியை பாதிக்குமா ?

உலகம் முழுவதிலும் பல்வேறு தடுப்பூசிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி மக்களுக்கு தடுப்பூசி விநியோகமும் தொடங்கிவிட்டன இந்த நிலையில் இப்போது புதிய வகை வைரஸ் வேகமாக பரவுவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடுப்பூசிகள் மியூட்டேட் அடைந்த வைரசுக்கு எதிராகவும் செயல்படுமா என பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் வைரஸ் மியூட்டேட் அடைந்திருந்தாலும் அது தடுப்பூசியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போன்ற எந்த காரணத்தையும் வல்லுநர்கள் கண்டறியவில்லை .

இங்கிலாந்து அரசாங்கத்தின் ஆலோசனைக் குழு புதிய மற்றும் வளர்ந்து வரும் வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனைக் குழு இது தொடர்பாக ஒரு ஆய்வறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில் தடுப்பூசி செயல்திறனைக் குறைக்கும் வகையில் எந்தவொரு வைரஸும் அல்லது வைரஸ் கூம்பில் இருக்கும் புரதத்தையும் நாங்கள் கண்டறியவில்லை. என்று தெரிவித்துள்ளனர். இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்த புதிய வகை வைரஸ்க்கும் எதிராக செயல்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய நிபுணர்கள் நம்புகின்றனர் என்று ஜெர்மனியின் சுகாதார அமைச்சரும் தெரிவித்துள்ளார்.