சென்னை: பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இப்படி இணைக்கவிட்டால் பல்வேறு பாதிப்புகளை மக்களும் சந்திக்க நேரிடும்.
பான் கார்ட் என்பது நம்மிடம் உள்ள நிரந்தர கணக்கு எண் ஆகும். பொருளாதார ரீதியாக எந்த சேவையை தொடங்க வேண்டும் என்றாலும் பான் எண் அவசியம். அதாவது வங்கி கணக்கு தொடங்குவது தொடங்கி வங்கியில் பணம் அளிப்பது வரை பான் கார்ட் அவசியம்.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் அனுப்பவும் பான் கார்ட் அவசியம் ஆகும். அதேபோல் வங்கியில் அதிக பணம் பெற, பணம் சேமிக்க பான் கார்ட் அவசியம். இதெல்லாம் போக வருமான வரி தாக்கல் செய்யவும் பான் கார்ட் அவசியம்.
இந்த பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் மார்ச் 1 வரை இதற்கு நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மார்ச் 1க்கு பின் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் கார்ட் இயங்காது. அப்படி இயங்காத பட்சத்தில் பின்வரும் சேவைகளை நீங்கள் பயன்படுத்த முடியாது.
1. லோன் எடுக்க முடியாது.
2. அதிக பணம் அனுப்ப , பெற முடியாது.
3. முதலீடுகளை செய்ய முடியாது.
4. வருமான வரி தாக்கல் செய்ய கூடாது.