தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவருக்கு வயது 95. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்துள்ளது. கடந்த மாதம் ஓ.பி.எஸ். தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு, பெரியகுளத்தில் உள்ள வீட்டிற்கு பழனியம்மாள் அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் பழனியம்மாள் உடல்நிலை சரியில்லாததை அடுத்து தேனியில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அவரது வீட்டில் சற்று நேரத்திற்கு முன்பு காலாமானார்.
முக்கிய அரசியல் பிரமுகர்கள் நாளை காலை பழனியம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.