சென்னை: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடி, 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இடைநீக்கத்தை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வி.பாலகணபதி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பாஜக நிர்வாகி நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு எதிராக பாஜகவினர் பலரும் கடுமையாக கருத்து தெரிவித்தனர். பாஜக நிர்வாகி தினேஷ் ரோடி ஒரு படி மேலே எடப்பாடி உருவபொம்மையை எரிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தினேஷை கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக அறிவித்தது. இது தொடர்பாக பாஜக சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு பாரதிய கொள்கை. முரணாக ஜனதா செயல்பட்டதாலும், கட்சியின் கட்சியின் தூத்துக்குடி வடக்கு தலைவர் அனைத்து குறிக்கோள்களுக்கு நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாலும் மாவட்ட பாரதிய ஜனதா திரு.தினேஷ் ரோடி கட்சியின் இளைஞர் அவர்கள் தற்போது அணி மாவட்ட வகித்தும் வரும் பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்., என்று கூறப்பட்டது.
தற்போது இவரை மீண்டும் கட்சியில் சேர்த்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் திரு வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து திரு தினேஷ் ரோடி அவர்களை ஆறு மாத காலம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவித்த அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் திரு தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது., என்று கூறப்பட்டு உள்ளது.
ALSO READ | சொல்ல முடியாது.. அதானி கடன் பற்றி மறுத்த நிர்மலா சீதாராமன்.. சீறிய சு. வெங்கடேசன்