Saturday, March 25, 2023
Homeசெய்திகள்இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி: மு.க ஸ்டாலின் இரங்கல்!

இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி: மு.க ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம்.தம்பி சரணுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல் என இரங்கல் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவையொட்டி பலரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ‘பாடும் நிலா’ எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம்.

கொரோன கொடுங்கலாம் நம்மிடமிருந்து அற்புத இசைக்கலைஞரைப் பிரித்துவிட்டது.

பரபரப்பான உலகில் மக்களின் மனஅழுத்தத்திற்கு இயற்கையான மருந்து எஸ்.பி.பி.

16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியதுடன் , பல படங்களுக்கு இசையமைத்தும், நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்ததும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவர்.

தம்பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைதுறையினர்க்கும் ரசிகர்களுக்கும் திமுக சார்பில் ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.

காலம் அவரை பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றுன்றும் உயிர்த்திருப்பார் இரவாப் புகழ் கொண்ட பாடகர் எஸ் பி பி அவர்கள்!
என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.