Monday, March 27, 2023
Homeசெய்திகள்உலகம்தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில் வெளிநாடுகளை நாடியிருக்காமல், உள்நாட்டிலேயே ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியை துரிதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் நிர்வாகத்துடன் வடகொரியா எப்படியான அணுகுமுறையை மேற்கொள்ள போகிறது என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. இதற்கிடையே கிம் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Workers’ Party) கூட்டத்தை, அடுத்தமாதம் அவர் நடத்த இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில், இந்த கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை. ஜோ பிடன் அடுத்த மாதம் அதிபராக பதவியேற்க இருக்கும் சூழலில் கிம் நடத்தவுள்ள இந்த கூட்டம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் விதமாக கிம் பல்வேறு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு இருக்கிறார். மேலும் அதுபோன்ற ஆணுஆயுதங்களை நாடு முழுவதும் கொண்டு செல்ல பயன்படும் வகையிலான வாகனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மற்றும் நீர்மூழ்கி கப்பல்களையும் உருவாக்கி வருவதாக நம்பப்படுகிறது.

பல்வேறு சர்ச்சைகளை கடந்து கிம் ஜோங் உன் மீண்டும் அவருடைய முன்னேற்ற நடவடிக்கைகளை தொடங்க வாய்ப்புள்ளது. அதுகுறித்த அறிவிப்புகள் பாரம்பரிய புத்தாண்டு தின உரையின் போதோ அல்லது மற்றொரு ஏவுகணை சோதனையின் வாயிலாகவோ இருக்கலாம். ஒருவேளை அப்படி நடைபெற்றால் அமெரிக்காவின் கடந்தகால முயற்சிகள் தோல்வியடைந்ததாக ஜோ பிடனுக்கு அனுப்பும் ஒரு சமிக்ஞையாக இருக்கலாம். ஆயுதங்கள் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் முதல் எண்ணெய் மற்றும் வெளிநாட்டு பணம் வரை அனைத்தையும் அணுகுவதற்கான தடைகள் இருந்தபோதிலும் கூட, வடகொரியாவின் புதிய ஆயுத உற்பத்திக்கு தேவையான பொருட்களில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

கடந்த இரண்டு தசாப்தங்களில் வடகொரியா மீது விதிக்கப்பட்ட மிகப்பெரிய பொருளாதார தடையாக இருந்தபோதிலும் டிரம்பின் எந்த ஒரு அழுத்தங்களும் கிம் ஜோங் உன்னை தன்னுடைய ஆயுத திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வைத்ததாக சிறிய அறிகுறியும் இல்லை. 36 வயதாகும் கிம் அடுத்த ஆண்டுடன் தான் பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த 10 ஆண்டுகளில் தன்னுடைய தந்தை மற்றும் தாத்தாவை விட அதிக அளவிலான அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் பிடன் நிர்வாகத்தால் கூட அமெரிக்காவின் நீண்டகால கோரிக்கையான அணு ஆயுத சோதனைகளை மொத்தமாக கைவிட வேண்டும் என்பதை நிறைவேற்றுவது கடினம். அதற்கு பதில் தற்காலிமாக அந்த திட்டங்களை ஒத்திவைக்க மட்டுமே முடியும்.

அணு ஆயுத பயன்பாடு:

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வடகொரியா எந்த ஒரு அணு ஆயுதங்களையும் வெடிக்க செய்து சோதனை செய்யவில்லை என்றாலும், அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு கப்பல்களுக்கு நிகரான போர்கப்பல்களை உருவாக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். வடகொரியா அதன் ஏவுகணை போர்கப்பல்களில் பொருந்தும் வகையில் சிரியதாக்கப்பட்ட அணுசக்தி சாதனங்களை உருவாக்கியிருக்கலாம்” என்று ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிபுணர் குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் கூறியிருந்தனர். நிபுணர்களின் கூற்றுப்படி, தலைநகர் பியோங்யாங்கில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உருவாக்கும் திறன்கள் உள்ளன, அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகளை உருவாக்க தேவையான இணைவு எரிபொருள்கள் டியூட்டீரியம் மற்றும் ட்ரிடியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு கிம் நடத்திய அணு ஆயுத சோதனையில் பயன்படுத்திய அணுகுண்டு 1945 ஆம் ஆண்டு ஜப்பான் மீது அமெரிக்கா வீசியதை விட 10 மடங்கு சக்திவாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள்:

கிம் ஜோங் உன் ஆட்சி காலத்தில் சமீபத்திய ஆண்டுகளில் பல புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கியுள்ளனர், அவை எல்லாம் சக்திவாய்ந்த, மற்றும் கொண்டு செல்ல எளிதாக இருக்குமாறும் வடிவமைக்கப்பட்டவை. அக்டோபர் மாதம் பியோங்யாங்கில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில்,கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையை அறிமுகப்படுத்தியிருந்தார். 2019 ஆம் ஆண்டில், வட கொரியா இரண்டு அடுக்கு புகுசாங் ஏவுகணையையும் சோதனை செய்தது. மேலும் 28,500 அமெரிக்க துருப்புக்கள் உட்பட ஒட்டுமொத்த தென்கொரியாவையும் சில நிமிடங்களில் தாக்கி அளிக்க கூடிய மல்டி ஹைப்பர்சோனிக் கே.என் -23 ஏவுகணைகளையும் கிம் பரிசோதனை செய்துள்ளார். இதன் மூலம் கடந்த காலங்களில் டிரம்ப் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலன் கொடுத்ததாக தெரியவில்லை. அடுத்து வரும் பிடன் நிர்வாகத்திற்கு இதனால் பெரிய சவால் காத்திருக்கிறது.