Saturday, March 25, 2023
Homeசெய்திகள்இந்தியாEngineer's Day 2020: எதற்காக செப்.15-ல் 'பொறியாளர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Engineer’s Day 2020: எதற்காக செப்.15-ல் ‘பொறியாளர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது தெரியுமா?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் வல்லுனர் மற்றும் ஒரு அற்புதமான மனிதர் சர் எம்.வி என்றும் பிரபலமாக அழைக்கப்படும் சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

சர் எம்.வி 15 செப்டம்பர் 1860 இல், கர்நாடகா மாநிலத்தில் முத்தநஹள்ளி, சிக்கபல்லபுரா என்னும் கிராமத்தில் பிறந்தவர். இந்தியாவின் மிகச் சிறந்த சிவில் இன்ஜினியர், பொருளாதார நிபுணர் மற்றும் அணை கட்டுபவர் என்று அழைக்கப்படுகிறார். 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கியமான பில்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர். முக்கியமாக இந்தியாவில் அணைகள் மற்றும் நீர் அமைப்புகளை உருவாக்கியவர்.

1912 முதல் 1918 வரை மைசூர் திவானாக இருந்த காலத்தில், அவர் மாநிலத்தை முழுவதுமாக மாற்றினார். மைசூரை ஒரு முன்மாதிரி மாநிலமாக உருவாக்கினார். தொழில்துறை, பொருளாதார மற்றும் சமூக திட்டங்களில் ஏராளமான பங்களிப்புகளுக்காக சர் எம்.வி “நவீன மைசூரின் தந்தை” என்று அழைக்கப்பட்டார்.

விஸ்வேஸ்வரய்யாவின் சாதனைகள்:

  • மைசூரில் புகழ்பெற்ற கிருஷ்ண ராஜா சாகரா அணையின் தலைமை பொறியாளராக சர் எம்.வி இருந்தார்.
  • 1909 ஆம் ஆண்டில், ஹைதராபாத் நகரம் வெள்ள அபாயத்தில் இருந்தபோது, ​​சர் விஸ்வேஸ்வரய்யா, ஹைதராபாத் நகரத்திற்கான வெள்ள பாதுகாப்பு அமைப்பின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவரது சிறந்த பொறியியல் பணி விசாகப்பட்டினம் துறைமுகத்தை கடல் அரிப்புகளிலிருந்து காப்பாற்றியது.
  • சர் எம்.வி, தானியங்கி வெள்ளமடை மதகை கண்டுபிடித்தார். அதவாது வெள்ள நீர் அதிகரிக்கும்போது தானாக மடை திறந்து வெள்ளத்தை கட்டுப்படுத்தும் அமைப்பு. இது 1903 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள கடக்வாஸ்லா நீர்த்தேக்கத்தில் முதன்முதலில் நிறுவப்பட்டது. இதற்கான காப்புரிமையும் இவரது பெயரில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பெங்களூரு அரசு பொறியியல் கல்லூரி சர் எம்.வி அவர்களால் நிறுவப்பட்டது, பின்னர் அவரது நினைவாக University Visvesvaraya College of Engineering (UVCE) பெயரிடப்பட்டது.
  • இவரது எண்ணற்ற பணிக்காக 1955 ஆம் ஆண்டில், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • 1915 ஆம் ஆண்டில் , கிங் ஜார்ஜ் 5 அவர்களால் விஸ்வேஸ்வரய்யாவிற்கு பிரிட்டிஷ் நைட்ஹூட் ( kighthood ) என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதன் பின் இவர் சர் மோக்சகுன்டம் விஸ்வேஸ்வரய்யா என்று அழைக்கப்பட்டார்.

இந்நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அணைத்து பொறியாளர்களுக்கும் “இனிய பொறியாளர் தின” வாழ்த்துக்கள்.