Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்யாரும் செல்ல முடியாத இருள் சூழ்ந்த இடம்.. உலகின் ஆழமான பகுதிக்குள் கப்பலை அனுப்பிய...

யாரும் செல்ல முடியாத இருள் சூழ்ந்த இடம்.. உலகின் ஆழமான பகுதிக்குள் கப்பலை அனுப்பிய சீனா

பூமியின் ஆழமான பகுதியான பசுபிக் பெருங்கடலில் இருக்கும் மரியானா அகழிக்குள் சீன விஞ்ஞானிகள் மூன்று மனிதர்களுடன் கூடிய சிறிய நீரில் மூழ்க கூடிய சிறிய கப்பல் ஒன்றை அனுப்பி படம் பிடித்துள்ளனர்.

ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே குவாம் என்ற சிறிய தீவுக்கு அருகில், நீரின் மேற்பரப்பிற்கு மிகக் கீழே, மரியானா அகழி அமர்ந்திருக்கிறது. மரியானா அகழி தான் பூமியில் அமைந்துள்ள கடலின் மிகவும் ஆழமான பகுதி, இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கவே முடியாத பல மர்மங்கள் இந்த ஆழ்கடல் அகழியில் தான் ஒளிந்துள்ளது.

இந்த ஆழ்கடலில் அமைந்துள்ள மர்மங்களை கண்டறிய பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் அது அவ்வளவு எளிதானது கிடையாது. கடலுக்கு அடியில் பல ஆயிரம் அடி கீழே செல்ல செல்ல அழுத்தம் அதிகரிக்கும் மேலும் சூரிய ஒளி வெளிச்சமும் இன்றி முற்றிலும் இருள் சூழ்ந்திருக்கும். உதாரணமாக முதல் 660 அடி ஆழத்திற்குள் 90 சதவிகித கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. 800 அடி ஆழத்தில் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் செல்லும், 1044 அடி தான் ஸ்கூபா டைவிங்கில் அதிகபட்ச சாதனையாக உள்ளது. 3300 அடிக்கு மேல் சூரிய ஒளி தெரிவது தடைபடும்.

8200 ஆடி ஆழத்தில் ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்கள் இருக்கும். 25,262 அடியில் தான் ஆழ்கடலில் வாழும் உயிரினம் இதுவரை படம்பிடிக்கப்பட்டுள்ளது. இப்படி கடலுக்குள் அதிக ஆழத்திற்குள் செல்ல செல்ல ஒவ்வொரு தொடர்பும் துண்டிக்கப்படும் மேலும் நீரின் அழுத்தமும் அதிகரிக்கும், இதனால் யாராலும் அந்த பகுதிக்குள் எளிதாக சென்றுவிட முடியாது. இதுவரை மொத்தம் மூன்று பேர் தான் அதற்கான முயற்சியில் இறங்கி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தான் சீன ஆராய்ச்சியாளர்களும் மரியானா அகழிக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஃபெண்டூஷே என பெயரிடப்பட்டுள்ள கப்பல் 3 பேர் கொண்ட குழுவுடன் சுமார் 10 ஆயிரம் அடிக்கு மேலே ஆழத்திற்குள் சென்றுள்ளது. ஆழ்கடலில் படம்பிடிக்க கூடிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோவில் குப்பை மேகங்களால் சூழப்பட்ட கடலின் இருளில் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் நீரில் மூழ்கியுள்ள பொருட்கள் அசைந்துகொண்டு இருந்தன. ஆழ்கடலிற்குள் செல்லும் போது உயிரியல் மாதிரிகள் சேகரிக்க இயந்திர கைகள் இந்த கப்பலில் இணைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலி அலைகளை எழுப்பி அருகில் இருக்கும் பொருட்களை கண்டறியும் பொருட்டு சோனார் கண்களும் இதில் உள்ளது.

இந்த ஆராய்ச்சி மூலம் கடலின் அடி ஆழத்தில் இருக்கும் பல இனங்கள், மற்றும் உயிரினங்களின் தன்மை குறித்து தெரிந்துகொள்ள முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் நாங்கள் இதை ஒரு உண்மையான வெற்றி என்று அழைப்பதற்கு முன் இன்னும் இரண்டு சோதனைகளுக்கு மேல் எடுக்கும்” என்று சீன அறிவியல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆராய்ச்சியாளர் ஜு மின் கூறியுள்ளார்.