முக்கிய பொருட்கள்
- 1 லிட்டர் தடிமனான பால்
- வெல்லம் – ¾ கப்
- பிஸ்தா – தேவையான அளவு
- ஏலக்காய் – தேவையான அளவு
- வினிகர் – தேவையான அளவு
- தண்ணீர் – வினிகர்
செய்வது எப்படி?
- ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் திக்கான பாலை சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள்.
- பால் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரில் கலந்த வினிகரை அதில் சேர்த்து பாலை திரிய விடுங்கள்.
- பால் திரிந்து கெட்டியானதும் ஒரு கிண்ணத்தில் மஸ்லின் துணியைப் பயன்படுத்தி பாலை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
- இப்போது நமக்கு பன்னீர் கிடைத்துவிட்டது. இந்த பன்னீரில் வினிகரின் வாசனை போகும்வரை இரண்டு முறை தண்ணீரில் நன்றாக அலசுங்கள்.
- இப்போது பன்னீரை நன்கு அழுத்தி அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுங்கள். இப்போது துணியிலிருந்து பனீரை எடுத்து ஒரு தட்டில் வைத்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
- இப்போது பன்னீரில் ஏலக்காய் பொடியையும் ஆர்கானிக் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள்.
- நீங்கள் எவ்வளவு அதிகமாக பிசைகிறீர்களோ அவ்வளவு மென்மையான சந்தேஷ் உங்களுக்கு கிடைக்கும்.
- இந்த பனீர் கலவையை மிக்ஸியில் போட்டு சில நிமிடங்கள் அரைத்துக் கொள்ளுங்கள். இதனால் கலவை நன்றாக கலந்து இருக்கும். இப்போது பன்னீர் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பேப்பர் கப்புகளில் வையுங்கள்.
- துருவிய பிஸ்தா பருப்புகளால் அலங்கரித்து பரிமாறுங்கள். இதை பிரிட்ஜில் வைத்து குளிர்வித்து சாப்பிட்டால் அதன் சுவை இன்னும் அபாரமாக இருக்கும்.
இதை மேலே கூறியவாறு அருமையாக செய்து இதன் சுவையை அனுபவியுங்கள்.
ALSO READ | சூப்பரான மீன் பொரியல் செய்வது எப்படி? ரொம்ப ஈசிங்க.!