பலகாரங்களில் அனைவருக்கும் பிடித்த பலகாரமாக விளங்குவது பனியாரம் ஆகும். பனியாரத்திலே பல சுவைகளில் பல விதமாக செய்து அசத்தலாம். அதில் முட்டை பனியாரம் தனிச்சுவை மிகுந்தது. சுவையான முட்டை பனியாரம் செய்வது எப்படி தெரியுமா?
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு -ஒரு கப்
முட்டை -2
சின்ன வெங்காயம் -6
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை -1 கொத்து
கடுகு – கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
- வெங்காயத்தை நீளவாக்கிலும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
- பின்னர் கலக்கி வைத்த முட்டையை இட்லி மாவுடன் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்,
- வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அவற்றை தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் தாளித்த பொருட்களை முட்டை இட்லி மாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- குழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.
- பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
இப்போ சூடான முட்டை பனியாரம் தயார். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கொடுத்து சுவையுடன் அன்பை பகிருங்கள்.