Tuesday, March 28, 2023
HomeLifestyleதசைவலி ஏன் ஏற்படுகிறது? வீட்டில் இருந்தே எப்படி சரி செய்வது!

தசைவலி ஏன் ஏற்படுகிறது? வீட்டில் இருந்தே எப்படி சரி செய்வது!

இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று மூட்டு வலி ஆகும். குறிப்பாக, குளிர்காலத்தில் இந்த மூட்டு வலி பலருக்கும் அதிகளவில் ஏற்படுகிறது. இதுபோன்ற வலிகளை நாம் தொடக்கத்திலே வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம்.

உடல் உறுப்புகள் அதிக நேரம் செயல்பாட்டில் இருந்தாலோ அல்லது அதிக நேர உடல் உழைப்பு சம்மந்தமான வேலையில் ஈடுபட்டாலோ ஏற்படும் பிரச்சனை தான் தசை வலி. சில சமயங்களின் அதனை சரி செய்ய போதுமான ஓய்வே சிறந்தது. மருத்துவர்கள் இந்த தசை வலியை மயால்ஜியா என்கின்றனர்.

என்ன காரணம்..?

உடலில் போதுமான தண்ணீர் இல்லாதபோது, உங்கள் தசைகள் இறுக்கமாக மாறும். அதனால் அடுத்த முறை தசை வலி ஏற்பட்டால் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தீர்களா என்பதை யோசித்துப் பாருங்கள். தண்ணீரைக் குடியுங்கள். போதுமான அளவு தண்ணீர் இல்லையென்றால் தசை இறுக்கமாகி வலி ஏற்பட்டு அதனால் காயம் ஏற்படும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் சருமத்தின் மேற்பரப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதனால் தசை வலியைப் போக்க முடியும். நான்கு தேக்கரண்டி கடுகு எண்ணெய்யை சூடாக்கி அதில் பத்து பல் நறுக்கிய பூண்டை சேர்க்கவும். பூண்டு பொன்னிறமாக மாறும் வரை சூடாக்கி, அதில் கற்பூரவல்லி இலையைப் போடவும். பின் இதனை குளிரவிட்டு வடிகட்டிக் கொள்ளுங்கள்.

வடிகட்டிய எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இதனை ஒரு நாளைக்கு பல முறை கூட செய்யலாம். பூண்டில் உள்ள சல்பர் மற்றும் செலினியம் இரண்டும் தசை வலியைப் போக்க உதவும்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய் அல்லது கெய்ன் மிளகு தசை வலிக்கு ஒரு அற்புதமான மருந்தாகும். இது தசை விறைப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை ஒன்றாகக் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி அதன்மேல் மெல்லிய துணி கொண்டு கட்டு போட்டு விட்டு, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் எழுந்ததும் அதனை கழுவி விடுங்கள். இதனை நீங்கள் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

வாழைப்பழம் சாப்பிடுங்க

தசைவலியைப் போக்க சிறந்த உணவாக வாழைப்பழம் விளங்குகிறது. வாழைப்பழம் தசை வலியைப் போக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது தசைப்பிடிப்பு காரணமாக ஏற்படும் தசை வலியைத் தீர்க்க உதவும். உடலில் பொட்டாசியம் அளவு குறைந்தால் தசை பலவீனம், சோர்வு மற்றும் தசைப் பிடிப்புகள் ஏற்படலாம். எனவே தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது தசை வலிக்கு சிகிச்சையளிக்க உதவும்.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தசை வலியை அகற்றவும், தசைப் பிடிப்புகளை குறைக்கவும் உதவும். இரண்டு சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் உடன், 2 சொட்டு பெப்பர்மின்ட் எண்ணெய், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
கலந்த எண்ணெயை தசை வலி உள்ள பகுதிகளில் தடவவும். அல்லது, உலர்ந்த ரோஸ்மேரி இலைகளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் பாதிக்கப்பட்ட பகுதியை ஊறவைத்தும் பயன்படுத்தலாம்.

மேற்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைப்பிடித்த தசைவலியில் இருந்து விடுதலை பெறுங்கள். நீண்டநாட்களாக தசைவலி இருக்கிறது என்றாலோ, மேற்கண்ட வைத்தியங்களுக்கு சரியாகவில்லை என்றாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.