Thursday, June 1, 2023
HomeLifestyleஇத்தனை மகத்துவமா..? மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது ஏன் தெரியுமா..?

இத்தனை மகத்துவமா..? மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது ஏன் தெரியுமா..?

ஆணுக்கும், பெண்ணுக்குமான திருமணமாகிவிட்டது என்பதை உணர்த்தும் மிகப்பெரிய அடையாளமாக தாலி உள்ளது. மஞ்சள் கயிற்றில் ஒரு ஆண்மகன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும்போது ஏற்படும் உணர்வானது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். அந்தளவிற்கு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தையும், அன்பையும், பரஸ்பரத்தையும் தினம் தினம் அதிகரிக்க வைக்கும் தன்மை கொண்டது தாலி ஆகும்.

தமிழ்நாட்டில் அப்பேற்பட்ட மகத்துவம் வாய்ந்த தாலியை பலரும் மஞ்சள் கயிற்றில்தான் அணிகின்றனர். என்னதான் வசதி வாய்ப்புகளம் வந்தாலும் மஞ்சளில் தாலி அணிய வேண்டும் என்று கூறுவதன் அர்த்தம் ஏன் தெரியுமா?
தமிழ்நாட்டில் பொதுவாக, பெண்கள் தாலியை மஞ்சள் கயிற்றில் அணிகிறார்கள்.

மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி. மஞ்சள் பொடியை உணவில் சேர்த்து சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மஞ்சளை சாப்பிட்டால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது போலவே, அதனை தினமும் உடலில் பூசிக்கொண்டால் நம்மையும், நம் உடலையும் சுற்றி எந்த கிருமிகளும் அண்டாமல் பாதுகாக்கும்.

நம் முன்னோர்கள் மஞ்சளை உணவிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தினர். ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே அந்த பகுதி மக்களின் பழக்கவழக்கங்கள் அமைகின்றன. நம் அம்மாக்கள் அல்லது பாட்டிகள் தாலி கயிற்றில் தினமும் மஞ்சள் அரைத்து பூசுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
ஆண்களை விட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. அதனால் பெண்களுக்கு விரைவில் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே பெண்கள் முகம், கைகள், கால்கள் போன்ற உடல் உறுப்புகளுக்கு மஞ்சள் தேய்த்து குளிப்பது வழக்கமாக வைத்திருந்தனர்.

அதேசமயம் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாக இருப்பதால், தாலி கயிற்றிலும் தினமும் மஞ்சள் பூசுகின்றனர். இதனால் தாயும், சேயும் நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்.
மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணம், நம் உடல்நிலையை சீராக பாதுகாக்க வேண்டும் என்பதே ஆகும். இனியாவது மஞ்சள் கயிறான தாலியின் மகத்துவம் அறிந்து கொள்வோம்.

ALSO READ | கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதோ…!