கடக்நாத் கோழி.. நம்ம ஊரில் கருங்கோழி என்று அழைக்கபடும் இது மத்யபிரதேசத்தை பூர்விகமாக கொண்டது. இதறக்கு ” காளி மாசி ” என்று இன்னொரு பெயர் உள்ளது. அதாவது கருஞ்சதை கோழி என்று பொருள். இதன் இறைச்சி, முட்டை, எலும்பு என அனைத்துமே கருமை நிறத்தில் காணப்படுகின்றது. இதறக்கு கரணம் இதன் உடலில் நிறைந்துள்ள மெலனின் நிறமி.
கருமை நிறம் கொண்ட மூலிகை பொருளுக்கு மருத்துவ குணம் அதிகம் என்று பழைய வைத்திய நூல்கள் குறிப்பிடுகிறது. ஆகையால் இந்த கருமை நிற இறைச்சிக்கு மௌசு அதிகம்.
மற்ற நாட்டுக்கோழிகளை காட்டிலும் புரத சத்து, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணம் அதிகம் இருப்பதாக சொல்லப்படும் கடக்நாத் கோழி, கிலோ 900 வரை விற்கப்படுகிறது. இந்த கோழி வளர்வதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதால் விலை கூடுதலாக விற்கப்படுகிறது. பிராய்லர் கோழி வெறும் 45 நாட்கிளில் 2.5 கிலோ வளர்ச்சி அடைந்துவிடும், ஆனால் கடக்நாத் கோழி 1.5 கிலோ வளர ஆறு மாத காலம் ஆகும்.
பிராய்லர் கோழியை ஒப்பிடும் போது இதில் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவு. பிராய்லர் மற்றும் வேறு கோழி வகைகளில் 13 -25 % கொலஸ்ட்ரால் அளவு உள்ளது. ஆனால் இதில் ௦.73 -1.05% மட்டுமே இருக்கிறது. மற்ற கோழிகளில், புரதத்தின் அளவு 18 -20% வரை இருக்கும். ஆனால் கடக்நாத் கோழியில் 25 % மேல் புரத சத்து இருக்கிறது. இந்த கோழி மற்ற நாட்டுக்கோழிகளை போல அடை காப்பது இல்லை. மற்றும் முட்டையின் கருவுறுதல் வீதமும் மிகக் குறைவு.
கடக்நாத் கோழியின் மருத்துவ குணங்கள்:
குட்டம், சிரங்கு, வாதம் போன்ற நோய்கள் கருங்கோழியின் இறைச்சியால் குணமாகும் என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. இது ஆண்களின் வீரியத்தை அதிகப்படுத்த பயன்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது.
கருங்கோழியின் மருத்துவ பயன்கள் பற்றி சித்தர்கள் பாடல் வரியில் குறிப்பிட்டு உள்ளனர்.
” குட்டங் கடிகிருமி கோராவா தக்கூட்ட
மட்டிடாச் சூலையறு மாதரசே – துட்ட
கிரந்தியொடு புண்வலிபோங் கேளுடலு ரக்கு
மருந்துகருங் கோழியூன் வை”
முற்காலத்தில் கருங்கோழியுடன் பிற மூலிகைகளை சேர்த்து செய்யப்படும் மருந்து மூலம், வாயு போன்ற பல நோய்களை குணப்படுத்தியதாகவும், இதன் முட்டையை சாப்பிட்டு வர உடல் வலிமை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
கருங்கோழியின் மருத்துவ நன்மைகள் பற்றி எந்த ஒரு மருத்துவ துறையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் ஸ்டெராய்டு ஊசி மூலம் வளர்க்கப்படும் பிரொய்லெரை ஒப்பிடும்போது இயற்கையான சூழலில் வளரும் நாட்டுக்கோழி, கருங்கோழியை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது.