Thursday, June 1, 2023
HomeLifestyleHealthகொளுத்துகிறது வெயில்..! சம்மரில் குழந்தைகளுக்கு தர வேண்டிய பழங்கள் என்னெ்ன? பெற்றோர்களே படிங்க..!

கொளுத்துகிறது வெயில்..! சம்மரில் குழந்தைகளுக்கு தர வேண்டிய பழங்கள் என்னெ்ன? பெற்றோர்களே படிங்க..!

மார்ச் மாதம் நாளையுடன் முடிய உள்ள நிலையில், இப்போதே கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. இன்னும் கத்திரி வெயில் தொடங்கினால் கருகிவிடுமோ என்ற அச்சம் உள்ளது. கோடை வெயில் இளைஞர்களையும், பெரியவர்களையுமே வெளியில் வர அச்சப்படுத்தும் சூழலில், குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவர்களை தேவையின்றி வெயிலில் அனுப்பாமல் இருப்பதுடன் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளும் அளிக்க வேண்டும். அந்த வகையில், கோடை காலத்தில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய பழங்கள் என்னென்ன என்பதை காணலாம்.

  • பெரிய நெல்லிக்காயை குழந்தைகளுக்கு அப்படியே கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அதனால் சிறிது உப்பு, மஞ்சள் கலந்து வேகவைத்து கொடுக்கவும். இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • சாத்துக்குடியில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். பல், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
  • மாதுளை பழத்திற்கு இரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி உண்டு. இது, குழந்தைகளின் இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவுகிறது.
  • கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்சூடு காரணமாக, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தடுக்கும் சக்தி கொண்டது, சப்போட்டா பழம். இந்த பழம் ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
  • கோடைக்காலத்தில் அனைவரும் விரும்பும் பழமாக தர்பூசணி உள்ளது. இதை பழச்சாறாக தராமல், பழமாகவே சாப்பிட குழந்தைகளுக்கு கொடுக்கவும். ஏனெனில், உடலில் நீர் வற்றிப்போகாமல் இருக்க பெரிதும் உதவும்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு துளி எலுமிச்சை சாற்றை கலந்து தருவது நன்மை தரும்.
  • பச்சை, கருப்பு, உலர்ந்த திராட்சை என எல்லா வகைகளையும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இது வெயில் காலத்தில் குழந்தைகளை எளிதில் சோர்வடைய விடாமல் பாதுகாக்கும்.
  • கோடைக்காலத்தில் குளிர்ச்சியை தரக்கூடிய பழங்களில் ஒன்று வெள்ளரி. இது குழந்தைகளுக்கு வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணித்து, உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
  • கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது அஜீரண கோளாறுகளை சீர்செய்யும். உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் அடைவதற்கும் உதவுகிறது.
  • முலாம்பழத்தை துண்டுகளாக்கி சர்க்கரை கலந்து கொடுத்தால், உடல்சூட்டை மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்சனையை தடுக்கும்.

ALSO READ | சம்மர் ஆரம்பிச்சாச்சு..! இந்த கலர்ல மட்டும் ட்ரெஸ் போடுங்க.. அதான் நல்லது..!