Monday, May 29, 2023
HomeAstrologyஇ‌ன்றைய ராசிபலன் (30/3/2023): கன்னிக்கு ஆசை.. மேஷத்துக்கு வேண்டும் பொறுமை..! அப்போ நம்ம ராசிக்கு என்ன...

இ‌ன்றைய ராசிபலன் (30/3/2023): கன்னிக்கு ஆசை.. மேஷத்துக்கு வேண்டும் பொறுமை..! அப்போ நம்ம ராசிக்கு என்ன இன்னைக்கு?

இ‌ன்றைய ராசிபலன் (30/3/2023):

மேஷம்

புதிய வாகனம் வாங்கும் எண்ணங்கள் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். நீர்நிலை பணிகளில் சற்று கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். ஆதாயம் உண்டாகும். அதிரடியான சில செயல்களின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

ரிஷபம்

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். மனதில் மாற்றம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.

மிதுனம்

எண்ணங்கள் மேம்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். கருத்து வேறுபாடுகள் குறையும். கணிதம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். தடைகள் குறையும் நாள்.

கடகம்

வாழ்க்கைத் துணை பிடிவாதமாக இருப்பார். திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். திருப்தியின்மை ஏற்படும். பயனற்ற பழக்கவழக்கங்களை குறைத்து கொள்வது நல்லது. ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்க வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். விரயங்கள் உண்டாகும் நாள்.

ALSO READ | ராமபிரான் ஏன் நவமியில் பிறந்தார் தெரியுமா? இப்படி ஒரு வரலாறு இருக்கா?

சிம்மம்

அலைச்சல்களின் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரம் மேம்படும். உடனிருப்பவர்களின் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவேறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். மறதி நிறைந்த நாள்.

கன்னி

மனதில் புது ஆசைகள் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உறுதி நிறைந்த நாள்.

துலாம்

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகத்தில் லாபம் மேம்படும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். பகை குறையும் நாள்.

விருச்சிகம்

மறைமுக ஆதாயம் கிடைக்கும். கல்வி தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். சிக்கனத்துடன் செயல்படுவது நெருக்கடிகளை குறைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கவனத்துடன் செயல்படவும். உறவினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பரிவு வேண்டிய நாள்.

தனுசு

கோபமின்றி செயல்படவும். பிறரின் மனதை பாதிக்கும் வகையிலான நகைச்சுவை பேச்சுக்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். பிரீதி நிறைந்த நாள்.

மகரம்

கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் குறையும். தாய்மாமன் வழியில் சுபகாரிய செலவுகள் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் வெற்றியை அளிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த புதிய பொறுப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்வு நிறைந்த நாள்.

கும்பம்

மனதில் நம்பிக்கையை உருவாக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். நற்பெயர் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் ஆதரவு ஏற்படும். தனவரவுகள் திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

மீனம்

மனதளவில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆதாயம் உண்டாகும். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பதற்றம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை பற்றிய புரிதல் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.