Thursday, June 1, 2023
HomeAstrologyராசிபலன் (21/2/2023): மேஷத்துக்கு மகிழ்ச்சி..! ரிஷபத்துக்கு நிம்மதி..! அப்போ உங்களுக்கு இந்த நாள் எப்படி?

ராசிபலன் (21/2/2023): மேஷத்துக்கு மகிழ்ச்சி..! ரிஷபத்துக்கு நிம்மதி..! அப்போ உங்களுக்கு இந்த நாள் எப்படி?

மேஷம்

எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாக பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோக பணிகளில் நல்ல பெயர் கிடைக்கும். தனவரவு அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு சிக்கலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதுவிதமான தைரியம் பிறக்கும். வெற்றிகரமான நாள்.

ரிஷபம்

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் பொறுப்பும், பதவி உயர்வும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். புதிய முதலீடுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். நலமான நாள்

மிதுனம்

தொழில் நிமிர்த்தமான பயணங்கள் சாதகமாக அமையும். மனதில் தெய்வ சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். சாமர்த்தியமாக செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

கடகம்

முடிவு எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பணிகளில் அசதிகள் உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் அலட்சியமின்றி செயல்படவும். முன்கோபத்தை குறைத்து கொள்வதன் மூலம் இன்னல்களை தவிர்க்க முடியும். நெருக்கமானவர்களிடம் சிந்தித்து செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.

சிம்மம்

பேச்சுக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகள் ஈடேறும் நாள்

கன்னி

வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். தாயின் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பாராத தனவரவு உண்டாகும். இனம்புரியாத கவலைகளால் சோர்வும், தாமதமும் ஏற்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். விருந்தினர்களின் வருகையால் சுபச்செலவுகள் ஏற்படும். எதிலும் அவசரமின்றி நிதானமாக செயல்படவும். லாபகரமான நாள்.

ALSO READ | ஓம் நமசிவாய..! திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 லிங்கங்கள் என்னென்ன?

துலாம்

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதுவிதமான இலக்குகள் உண்டாகும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகள் ஈடேறும். மனதில் சந்தோஷம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்

எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகி நிறைவு பெறும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுகம் நிறைந்த நாள்.

தனுசு

பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிதானமாக செயல்பட்டால் எதிர்ப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். தொழில்நுட்ப கருவிகளில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

மகரம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும். வெளி உணவினை உண்டு மகிழ்வீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் புதிய முயற்சிகளை நிறைவேற்றி கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.

கும்பம்

புதிய வேலை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். எதிலும் தற்பெருமையின்றி செயல்பட்டால் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். யோகம் நிறைந்த நாள்.

மீனம்

பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் ஒன்றுக்கு இரண்டு முறை ஆலோசித்து முடிவெடுக்கவும். பயனற்ற கருத்துக்களை தவிர்க்கவும். அமைதி நிறைந்த நாள்.